யார்தான் இந்த சாமர்த்தியசாலிகள் ?

ignore
சாமர்த்தியம் என்பதன் வார்த்தையில் இவ்வளவு வன்மம், அகங்காரம், சுயநலம், பொய், உண்மையின்மை, அகந்தை இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. “சாமர்த்தியமா அவன் அந்த வேலையை முடித்துவிட்டான்” என்பதின் பின்னணியில் ஏமாற்றியோ, பொய் சொல்லியோ அல்லது உண்மையை சொல்லாமலோ ஏதோ ஒன்று சாதிக்கப்பட்டிருக்கும். அங்கு ஏமாற்றப்பட்டவன் என்று ஒருவன் கண்டிப்பாக இருப்பான். சாமர்த்தியம் என்ற சொல்லே ஒரு நம்பிக்கைத் துரோகத்திற்கான சொல் என்பது என்னுடைய முழு நம்பிக்கை. இதில் என்னுடைய பெர்செப்ஷனை மாற்றிக்கொள்வது முடியாத விஷயம். இதில் ஏமாற்றப்பட்டவன் இடத்திலிருந்து இதை நான் ஏழுதுகிறேன், ஒரு குற்றவாளியாக.

உதாரணத்திற்கு,

சில மனிதர்கள் இருக்கிறார்கள். தங்களுக்கு இடம், பொருள், சுற்றுச்சூழல் இதையெல்லாம் பழகும் வரை பழகிவிட்டு, தங்களுக்கென்று ஒரு வட்டம் அமைந்ததும் ‘சே டு மை பொட்டக்ஸ்’ என்று சென்று விடுவார்கள். இப்படிப்பட்டவர்களை எப்படியும் வாழ்க்கையில் நாம் சந்தித்து இருப்போம். இப்படி ஒருவனை சமீபத்தில் சந்தித்தேன். கடைசியாக இவனைப்போல் 2011ல் சந்தித்தேன். இவன் 2016. 2011ஆனவன் இப்போது எங்கிருக்கிறான் என்றே எனக்கு தெரியாது. தொலைபேசி எண்ணை அழைத்தால் நம்பர் உபயோகத்தில் இல்லை என்கிறது. ஆனால் இந்த புதியவன் கொஞ்சம் நல்லவன் கொஞ்சம் சீக்கிரமே நகர்ந்துவிட்டான்.

இவர்களைப்போன்றவர்களை பார்க்கும்போது கோபம் தலைக்கு ஏறுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் கூறினார் அவ்வளவு ஆட்டிடியூட் இருக்கக்கூடாது உங்களுக்கு என்றார். அதை தலையில் ஏற்றி வைத்திருப்பவனுக்குத்தான் இந்த ஆட்டிடியூட் பற்றி சிந்தனைகளும் வரும் இல்லையெனில் தம்மை ஏதாவது சொல்லி புறந்தள்ள இம்மாதிரியான டெர்மினாலஜியை அவர்கள் உபயோகிப்பது வழக்கம். ஒருவனுடைய பாங்கு மாறுகிறது என்றால் அது அவர்களுடைய ஆட்டிடியூட் மாற்றத்தினால்தான் என்பது அவர்களுக்கு புரிந்தும் அந்த கேள்வியை நம்மிடம் கேட்பார்கள். முதலில் கேட்பவன் நல்லவன் அல்லது தவறிழைக்காதவன் ஆகிவிடுகின்றான்.

ஊர் பெயர், வேலை என்ன செய்தேன், எங்கிருந்து வருகிறேன், கல்யாணம் ஆனவனா, குழந்தைகள் உள்ளனவா, முகம் சுளிக்கிறவனா, தலைமேல் உட்கார்ந்தால் அனுமதிப்பவனா….மொத்தத்தில் அவர்களுடைய ஞாயத் தெராசில் நம்மை எடைபொட்ட பின் அவர்களுக்கு இந்த ஆட்டிடியூட் பற்றிய பேச்சு எழுகிறது. அதுவரை பேச்சுத் துணைக்கு மட்டுமே நாம் அவர்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பதுதான் இதில் வேடிக்கை.

எதிரே வரும்போது கூட இக்னோர் செய்துவிட்டு செல்லும் பிராணிகளும் இருகின்றன. நாமும் அவ்வாறுசெய்யும் போது அவர்களுக்கு இந்த ஆட்டிடியூட் பிரச்சினை. வடிவேலு பாணியில், உனக்கு வந்தா ரத்தம எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்பதுபோலத்தான்.

ஆக. நேர்பட பேசு என்று பள்ளியில் சொல்லிக்கொடுத்ததையும். மனதில் உள்ளவற்றை பேசு என்று கல்லூரியில் சொல்லிக்கொடுத்ததையும் செய்தால் அவர்கள் நம்மிடம் ஆட்டிடியூட் என்ற சாமர்த்தியத்தை காண்பிப்பார்கள்.

இதுவே, அதற்கு நேர்மாறான வேலையில் இறங்கி், வேண்டியவற்றை சாதித்துக்கொண்டு, வேண்டியவர்களை மட்டும் சுற்றி வைத்துக்கொண்டு, தேவை என்கிறபோது இம் மாதிரியான ஆட்களிடம் பேச்சை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு பெயர் சாமர்த்தியசாலிகள். நான் சொல்லவில்லை உலகம் அப்படிச் சொல்கிறது. என்னைக் கடந்து சென்ற அனைத்து சாமர்த்தியசாலிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தேவைக்காகவும் உதவிக்காகவும் என்றும் எப்போதும் காத்திருக்கும் உங்கள் “நண்பன்”.

வாழ்வில் ஒருமுறையாவது உங்களைபோலவே நீங்கள் சிலரை சந்திப்பீர்கள்.
என் உண்மையான நட்பிற்கு நீங்கள் கொடுக்கும் விலைதான் அது. அந்த விலையை நீங்கள் கொடுத்தே தீரவேண்டும். அதில் இருந்து நீங்கள் தப்பிப்பதற்கான வாய்ப்பே இல்லை.

One thought on “யார்தான் இந்த சாமர்த்தியசாலிகள் ?

Leave a reply to முனைவர் பா.ஜம்புலிங்கம் Cancel reply