உதாரணத்திற்கு,
இவர்களைப்போன்றவர்களை பார்க்கும்போது கோபம் தலைக்கு ஏறுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் கூறினார் அவ்வளவு ஆட்டிடியூட் இருக்கக்கூடாது உங்களுக்கு என்றார். அதை தலையில் ஏற்றி வைத்திருப்பவனுக்குத்தான் இந்த ஆட்டிடியூட் பற்றி சிந்தனைகளும் வரும் இல்லையெனில் தம்மை ஏதாவது சொல்லி புறந்தள்ள இம்மாதிரியான டெர்மினாலஜியை அவர்கள் உபயோகிப்பது வழக்கம். ஒருவனுடைய பாங்கு மாறுகிறது என்றால் அது அவர்களுடைய ஆட்டிடியூட் மாற்றத்தினால்தான் என்பது அவர்களுக்கு புரிந்தும் அந்த கேள்வியை நம்மிடம் கேட்பார்கள். முதலில் கேட்பவன் நல்லவன் அல்லது தவறிழைக்காதவன் ஆகிவிடுகின்றான்.
ஊர் பெயர், வேலை என்ன செய்தேன், எங்கிருந்து வருகிறேன், கல்யாணம் ஆனவனா, குழந்தைகள் உள்ளனவா, முகம் சுளிக்கிறவனா, தலைமேல் உட்கார்ந்தால் அனுமதிப்பவனா….மொத்தத்தில் அவர்களுடைய ஞாயத் தெராசில் நம்மை எடைபொட்ட பின் அவர்களுக்கு இந்த ஆட்டிடியூட் பற்றிய பேச்சு எழுகிறது. அதுவரை பேச்சுத் துணைக்கு மட்டுமே நாம் அவர்களுக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் இருப்பதுதான் இதில் வேடிக்கை.
ஆக. நேர்பட பேசு என்று பள்ளியில் சொல்லிக்கொடுத்ததையும். மனதில் உள்ளவற்றை பேசு என்று கல்லூரியில் சொல்லிக்கொடுத்ததையும் செய்தால் அவர்கள் நம்மிடம் ஆட்டிடியூட் என்ற சாமர்த்தியத்தை காண்பிப்பார்கள்.
இதுவே, அதற்கு நேர்மாறான வேலையில் இறங்கி், வேண்டியவற்றை சாதித்துக்கொண்டு, வேண்டியவர்களை மட்டும் சுற்றி வைத்துக்கொண்டு, தேவை என்கிறபோது இம் மாதிரியான ஆட்களிடம் பேச்சை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு பெயர் சாமர்த்தியசாலிகள். நான் சொல்லவில்லை உலகம் அப்படிச் சொல்கிறது. என்னைக் கடந்து சென்ற அனைத்து சாமர்த்தியசாலிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் தேவைக்காகவும் உதவிக்காகவும் என்றும் எப்போதும் காத்திருக்கும் உங்கள் “நண்பன்”.
அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது.
LikeLike